காந்தி பற்றிய அஞ்சல் வழி படிப்பு

 ஏப்ரல் 20 -க்குள் விண்ணப்பியுங்கள்!

 
மகாத்மா காந்தி பற்றிய அஞ்சல் வழி சான்றிதழ் படிப்பில் சேர விரும்புவோர்
ஏப்ரல் 20-ம் தேதிக்குள் பதிவுக் கட்டணம் செலுத்தலாம் என்று காந்தி கல்வி நிலையம் அறிவித்துள்ளது.

 இது தொடர்பாக, காந்தி கல்வி நிலைய இயக்குநர் அ.அண்ணாமலை வெளியிட்டுள்ள செய்தி:

 இந்தத் தேர்வை வீட்டிலிருந்தே எழுதலாம். கல்வித் தகுதியோ, வயது வரம்போ கிடையாது. தமிழிலும்,  ஆங்கிலத்திலும்  பாடத்திட்டம் உண்டு.  பதிவுக் கட்டணம் ரூ.200.  வேறு எந்தக் கட்டணமும் கிடையாது.

இந்தப் படிப்பில் சேருவோருக்கு அருகிலுள்ள நகரங்களில் நேரடித் தொடர்பு வகுப்பும் நடைபெறும். தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் அனுப்பி வைக்கப்படும்.

 எந்த மொழி வாயிலாகப் பயில விரும்புகிறார்கள் என்பதைக் குறிப்பிட்டு காசோலை மூலமாகவோ, வரைவு காசோலை (டிமாண்ட் டிராப்ட்) மூலமாகவோ,  இயக்குநர்,  காந்தி கல்வி நிலையம்,  58,  வெங்கட் நாராயணா சாலை,  தியாகராய நகர்,  சென்னை -17 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

தொலைபேசி: 044-2434 0607, 2434 6549.

நன்றி: தினமணி 

.

Leave a comment